Skip to main content

Posts

Showing posts from August, 2024

ஆற்காடு கிச்சிலி சம்பா இடுபொருள் பற்றிய விவரங்கள்.

பயிரின் மொத்த நிலப்பரப்பு : ஒன்னரை ஏக்கர். நாற்றின் வயது :18 நாள். ஜீவாமிர்தம், மீன்அமிலம், கடலைபுண்ணாக்கு, கலந்த பாசனம் - 9 தெளிப்புகள் : 1.சூடோமோனஸ் (38 வது நாள்) 2.மீன்அமிலம் (53 வது நாள்) 3. அக்னி அஸ்திரம் (85 து நாள்) ஊட்டஉரம் அளித்தது மொத்தத்தில் 1785  கிலோ. 1. அடியுரம் 2.68 வது நாள் 3.109 வது நாள் # கைக்களை -33 நாள் கோனோவீடர் -1 (58 வது நாள்)  குறைகள் : ஆள்பற்றாக்குறையால் நடவு மற்றும் களையெடுப்புகள் தாமதமாகி போனது. வழக்கமாக 13 நாள் நாற்றை நடவு செய்வோம். கோனோவீடரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதால் கிளைப்புகளின் எண்ணிக்கை 20 -25 என்ற அளவிலேயே இருந்தது. மூன்று முறை போடும்போது 40- 50 கிளைப்புகள் இருக்கும். பயிரில் எந்த பிரச்சனைகளும் இல்லை, நெல்மணிகள் நன்கு திரட்சியாய் உள்ளது. நோய், பூச்சி தாக்குதல், எலி வெட்டு அறவே இல்லை. பூச்சி கட்டுபாட்டிற்கு விளக்குபொறி, இனக்கவர்ச்சி என எதையும் எங்கள் பண்ணையில் வைப்பதில்லை, காரணம் உயிர்பன்மயசூழல் மற்றும் உயிரினங்களின் உணவு சங்கிலி சிறப்பாய் எங்கள் பண்ணையில் அமைந்திருப்பதாக  உணர்கிறேன். பூச்சிகளை கட்டுபடுத்த பொறிவண்டுகள் தட்டான்கள்,சி

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு சத்துகளின் பங்கு

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு பயிர்களின் மகசூலை தீர்மானிப்பதில் சுண்ணாம்பு சத்தின் (CALCIUM) பங்கு முக்கியமாக உள்ளது. பயிருக்கு பேரூட்ட சத்துகளின் தேவைக்கு (NPK) அடுத்தப்படியாக இரண்டாம் நிலை ஊட்டசத்துகளில் (CMS) சுண்ணாம்பு சத்து உள்ளது. பயிருக்கு சுண்ணாம்பு அவசியம் அதே நேரத்தில் அளவாக இருக்க வேண்டும். வெற்றிலைக்கு சுண்ணாம்பு எப்படியோ அதை போலத் தான் பயிருக்கு. மண்ணில் சுண்ணம்பு அதிகமானால், மண் புரை யோடி பயிர்களின் வளர்ச்சி தடைபடும் கால்சியம் கார்பனேட் எனப்படும் இந்த சுண்ணாம்பு சத்து மண்ணில் சரியான அளவிற்கு இருக்கிறதா? என்பதை கண்டறிய ஒரு எளிய தோதனை உள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்? நிலத்து மண்ணை கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு 10% ஹைட்ரோ குளோரிக் அமில (HCL) த்தை அதில் ஊற்ற வேண்டும். மண் பொங்கி கொண்டு வந்தால் மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருக்கிறது எனவும் சுமாராக நுரைத்தால் நடுத்தர நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சுண்ணாம்பு மண்ணின் தன்மை? இந்த மண் பெரும்பாலான வறண்ட பகுதியிலும், கருப்பு கலந்த மண்ணில் அதுவும் எங்கு எங்கு சிமெண்ட் ஆலை உள்ளதோ அப்பகுதியில் 30 கிமி