Skip to main content

களர் நிலத்தை எப்படி மாற்றலாம்

Sodic Soil change to Good soil 


களர்மன் என்பது மண்ணிலேயே அதிக உப்பு தன்மை சேர்ந்திருக்கும் நிலம் . ஒரு கல்லு உப்பு வாயில போட்டா  எப்படி இருக்கும் அதுவே ஒரு கைப்பிடி போட்டா எப்படி இருக்கும் அதுபோல்தான் பயிர்களுக்கு இந்த களர்மன் இருக்கும்  ஒரு கைப்பிடி மண் எடுத்தால் அதில் ஒரு கைப்பிடி உப்பு இருக்குனு அர்த்தம் அதாவது இரண்டும் கலந்தால் எப்படி இருக்குமோ அப்படினு அர்த்தம் .


மண்ணில் உள்ள உப்பை எடுக்க வேண்டும்


முதலில் களர் வகை மண்ணில் உள்ள உப்பை கரைக்கனும் மற்றும்  கடத்தவேண்டும் . உப்பை கரைக்க வேண்டுமென்றால் அதை மழை பெய்யும் பொழுது மழை  நீர் கரைக்கும் , அதுவே கடத்த வேண்டுமென்றால் நீரை தேக்கி வைக்க வேண்டும் , அப்படி செய்யவில்லை எனில் மேல் உள்ள உப்பு போய் விடும் அடி மண்ணில் உப்பு அப்படியே இருக்கும் . இதை தடுக்க நிலத்தில் முறையான முழங்கால் உயரம் அல்லது இரண்டரை அடி கரைகள்  போட வேண்டும் 


கரைகள் போட்ட பின்பு நிலத்தை நன்கு உழவேண்டும் ஒன்னேகால் அடி மண் வெளியே தெரியும்படி உழ வேண்டும். இப்படி செய்வதற்கு வேளாண்மை பொறியல் துறையில் இறகு வார்ப்பு கலப்பை இருக்கும் அதை கொண்டு வந்து உழ வேண்டும் ஒரு மணி நேரத்திற்கு 340 ரூபாய் வாடகை . இந்த கலப்பை மன்னனை நன்றாக திருப்பி போடும் .


இப்பொழுது மழை நாட்களில் மழை பெய்யும் பொழுது சென்று (மழை பெய்ய ஆரம்பித்து இரண்டு மணி நேரம் கழித்து ) வரப்பை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி நீரை வெளியேற்றுங்கள் நீர் முழுவது வெளியேறிய பின்பு மறுபடியும் கரையை அடைத்துவிடுங்கள் .


ஒருவேளை நிலத்தில் பயிர்கள் இருந்தாலும் நீரை தேக்கி வையுங்கள் ஏன் எனில் நாம் நீரை நிலத்தில் நிறுத்த போவது இரண்டு மணி நேரம்தான் இப்படி செய்வதுதான் நிலையான மாற்றத்திற்கான முதல் படி . அடுத்ததாக எந்த விவசாயம் செய்தலும் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் ஏன் எனில் நாம் தண்ணீரை நிறுத்தி வைப்பது 2 மணி நேரம் மட்டுமே 


அடுத்ததாக 5 அல்லது 6 லோடு சாணம் போட்டு பரப்பி உழுது விவசாயம் செய்ய வேண்டும் . அதிக அளவு உழுக உழுக நிலம் வளமாக மாறும் சாணம் என்பது அமிலம் உப்புக்கு எதிராக வேலை செய்து வேர் நன்கு போக வழி செய்யும்



இயற்கை இது பொருட்கள் ஜீவா அமிர்தம் , பஞ்சகாவியா ஈ .எம் கரைசல் , மீன் அமிலம் , அமிர்த கரைசல் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் . ஒவ்வொரு முறையும் தரைவழி தண்ணீர் கொடுக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் கலந்து விட வேண்டும் .


இதை அனைத்தையும் தவிர்த்து தக்கை பூண்டு என்ற பசுந்தால் உரம் உள்ளது அதை போட்டு 50 வது நாள் மடக்கி உழுகலாம் . கேழ்வரகு , வெள்ளை சோளம் போன்றவை  உப்புக்களை உறிஞ்சும் பயிர்கள் இவற்றை அதிகம் பயிர் செய்யலாம் . தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் அப்பொழுதுதான் நிலம் மாறும்  


G.M

Smart Vivasayi


Email - imperialhorticulturetips@gmail.com

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  19)  மீன் வளர்ப்பு - Click Here   20) மரம்_வளர்ப்போம்_பணம்_பெறுவோம்_விகடன் - Click Here 

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் . சரியான குரோபேக் தேர்ந்தெடுக்