Skip to main content

சதுப்புநில மரங்கள் பற்றிய 7 விஷயங்கள்

7 things about mangrove trees



நாம் கிட்டத்தட்ட எல்லாவகையான மரங்களையும் ரசிப்போம் , இளைப்பாறுவோம் அவ்வளவு ஏன் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது விளையாட கூட செய்திருப்போம் . ஆனால் இந்த மரங்களை எல்லாம் தவிர்த்து நமக்கு தனித்துவமாக இருப்பவை இந்த சதுப்பு நில காடுகள் . இந்த சதுப்பு நில  காடுகளை புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீரில் அடர்த்தியாக வளரக்கூடிய பெரிய மரங்களாகும் . இவை பெரும்பாலும் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில்தான் இருக்கும் . தமிழ் நாட்டில் பிச்சாவர கடற்கரையில் காணலாம் .


1) சதுப்பு நில மரங்கள் மட்டுமே உப்பு தண்ணீரில் வாழும் தன்மையை பெற்றுள்ளன . சதுப்பு நில மரங்களுக்கு அனைத்திற்குமே இந்த உப்ப தண்ணீரிலும் தாங்கியும் வளரும் தன்மை கொண்டுள்ளது .


2) சதுப்பு நில காடுகள் புயல் சுனாமி போன்றவற்றை இயற்கை அரணாக இருந்து தடுப்பதோடு வேர்கள் அடி ஆழம் வரை பரவி மண் அரிப்பையும் பெருமளவு தடுக்கிறது .
3) 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டை ஆக்சைடை கிரகிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது . துரதிஷ்ட வசமாக சதுப்பு நில காடுகளை அழிப்பதால் 122 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் அளவு அதிகரித்திரிக்கிறது .

4) கடல் வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாக இந்த சதுப்பு நில காடுகள் உள்ளன 1000 மேற்பட்ட மீன் இனங்கள் இந்த சதுப்பு நில காடுகளை நம்பி வாழ்கின்றன .கடற்கரைக்கு அருகில் வசிக்கும் பலர் இந்த சதுப்பு நிலங்களில் மீன் பிடிப்பதையே 

5) 35 வகையான சதுப்பு நில மரங்கள் இருந்தாலும் , வெள்ளை , கருப்பு , பட்டன் வுட்  மற்றும் ரெட் நிற மரங்களே அதிகமாக உள்ளன . அதன் வகைகளை பொறுத்து சின்ன குத்து செடி முதல் 40 அடி வரை வளருகின்றன 

6) சதுப்பு நில மரங்களின் அடர்த்தியான வேர்கள் அலைகளை தடுத்து நிறுத்தி மண் அரிமாணத்தை தடுக்கிறது , ஊட்டச்சத்து மிகுந்த வண்டல்மண்ணை சேமித்து வைக்கிறது . ஒருவேளை நாம் இந்த காடுகளை இழக்க நேரிட்டால் மறுபடியும் நிறுவுவது கடினம் .

7) சுற்று சூழல் பாதுகாப்பதில் இந்த சதுப்பு நில காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன அவை காலநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன, கடற்கரையோரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன, மீன், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான உணவை வழங்குகின்றன, பல்வேறு உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடத்தை உருவாக்குகின்றன.


இப்படி பல வகைகளில் நமக்கு உதவும் இவை பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அழிவை சந்தித்து வருகின்றன . இதனால் பல்லுயிர் பெருக்கம் குறையும் இதனால் கடலின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் . எனவே இந்த சதுப்பு நில காடுகளை பாதுகாப்பது இன்றய காலத்தின் தேவையாகும் 

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  19)  மீன் வளர்ப்பு - Click Here   20) மரம்_வளர்ப்போம்_பணம்_பெறுவோம்_விகடன் - Click Here 

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளரும் நமக்கு அதிக தக்காளியும் தரும் . சரியான குரோபேக் தேர்ந்தெடுக்