Skip to main content

விவசாய கடன்களும் மானியங்களும் - 1

                                         




               இந்தியாவை பொறுத்தவரை அரசாங்கம் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. அதில் வித விதமான கடன்களும் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக வீடு கட்ட வேண்டுமா அல்லது புதிதாக வாகனம் வாங்க வேண்டுமா இல்லை ஏதேனும் புதிய தொழில் தொடங்க வேண்டுமா அனைத்திற்கும் கடன் வசதி இருக்கிறது. ஆனால் விவசாயத்திற்கு மட்டும்தான் பலவகையான விவசாயக்கடன்கள் கொடுக்கபடுகின்றன வட்டி விகிதமும் குறைவு , கடனை திரும்ப செலுத்த கூடிய கால அளவும் கூட அதிகம்தான்.

  மற்ற கடன்களை விட விவசாயத்திற்கு மட்டும் ஏன் வகை வகையான கடன்கள் கொடுக்கப்படுகின்றன இதற்கு சரியான காரணம்  சொல்லவேண்டும் என்றால் இந்திய பொருளாதாரம் 80 சதவீதத்திற்க்கு மேல் விவசாயம் மற்றும் அதை சார்ந்த பொருட்களை நம்பி இருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் 70%  விவசாய்களாகவும் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றர். சரியான வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் அதனால்தான் இதற்கு அதிக கடன்களும் மானியங்களும் கொடுக்கப்படுகின்றன .

        நீங்கள் கடன் வாங்க போகிறீர்கள் என்றால் அந்த கடனை பற்றிய தெளிவான புரிதல் இருக்கவேண்டும் . குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமக்கு  என்ன வகையான கடன், எவ்வளவு கடன் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் . உங்களுக்கு இந்த பருவத்திற்கு 15000 தேவை படுகிறது , தற்பொழுது உங்கள் கையிருப்பு 5000 இருக்கிறது என வைத்துக்கொள்வோம் , நீங்கள் 8000 இருந்து 11000 வரை கடன் வாங்கினால் போதுமானது . ஆனால் இங்கே நிறைய பேர் 15000 கூட இல்ல 20000திற்கு  அல்லது 25000 மேல் கடன் வாங்குகின்றனர் . இப்படி அதிகமாக கடன் வாங்குவதற்கு இதை முக்கியமான கரணம் என்று சொல்ல முடியாது அனல் இதுவும் ஒரு காரணமாக சொல்லலாம் அது புதிய அரசாங்கம் பதவியேற்றால் கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை . அளவுக்கு மீறி வாங்குகிற கடன் என்றுமே நல்லதல்ல உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு கடன் வாங்கினால் போதும். 

                    அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது கடனை நீங்கள் திரும்ப செலுத்த கூடிய காலம் . என்னதான் வட்டி கம்மியாக இருந்தாலும் அல்லது கடனை திரும்ப செலுத்த கூடிய காலம் அதிமாக இருந்தாலும் எவ்வளவு  வேகமாக கடனை திரும்ப செலுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்துவது நல்லது . சில பேர் தவணைக்காலம் அதிகமாக இருக்கிறது இறுதியாக கட்டிக்கொள்ளலாம் என இருப்பிர்கள் இது மிக தவறு ஏன் என்றால் நீங்கள் பணம் கட்டவேண்டிய காலத்தில் கையில் பணம் இல்லாமல் போகலாம் மற்றும் நீங்கள் கட்டவேண்டிய வட்டி தொகை அதிகமாக இருக்கும் பின்பு அசலையும் கட்டுவது  கடினமாகிவிடும் .

      விவசாய கடன்களின் நன்மைகள் என்று பார்க்கும்போது மற்ற கடன்களை விட  விவசாயக்கடன் சீக்கிரமாக கிடைத்துவிடும் . நீங்கள் லோன் வாங்கும் போது  கொடுக்கவேண்டிய டாக்குமெண்ட் குறைவாக இருக்கும் . கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிகமாக இருக்கும் மற்றும் வட்டி விகிதம் கம்மியாக இருக்கும் .

விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன் வகைகள் என்று பார்த்தால் ஒரு மூன்று வகையாக பிரிக்கலாம் அந்த மூன்று பிரிவுக்குள் பலவகையான கடன்கள் கொடுக்கப்படுகின்றன

                                1)  விவசாய நடவடிக்கைகளுக்கான கடன்கள்
                                2)  விவசாய உள்கட்டமைப்புக்கான கடன்
                                3)  விவசாய தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான கடன்கள்

    விவசாய நடவடிக்கைகளுக்கான கடன்கள் என்பது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களுக்கு கொடுக்கப்படுகிறது (பால், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு )  விவசாயத்திற்கு என்று பார்க்கும்பொழுது இரண்டுவிதமாக பிரிக்கலாம் அது அறுவடைக்கு முன் அறுவடைக்கு பின் . உரம் வாங்குவது , கலை  எடுப்பது , அறுவடை செய்வது முன் வாங்கலாம் . கிரேடிங் , போக்குவரத்துக்கு போன்ற கடன்களை அறுவடைக்கு பின்வாங்கலாம்.

       விவசாய உள்கட்டமைப்புக்கான கடன் என்பது  மண் பாதுகாப்பு, பம்ப் செட் , திசு வளர்ப்பு , இயற்கை பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகள் தயாரிக்கவும் மற்றும் இயற்கை உரம் , மண் புழு உரம் தயாரிக்கவும் இதன் கீழ் கொடுக்கப்படுகிறது.

      விவசாய தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான கடன்கள் என்பது வேளாண் மருத்துவமனை மற்றும் வேளாண் வணிக மையம், வேளாண் செயலாக்க தொடக்கங்கள்(startups ) உழவர் சேவை சமூகம் இதன் கீழ் கொடுக்கப்படுகிறது.

     
        அடுத்த பகுதியில் குறுகிய காலக்கடன் , நடுத்தர மற்றும் நீண்ட கால கடன். விவசாயத்திற்கான தங்க நகை கடன் வாங்குவது பற்றி பார்ப்போம் 




Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...