Skip to main content

Posts

Featured post

நெல் வயல்களில் பாசி படர்வதை தவிர்க்க

1. உப்புத்தன்மை உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.  2. ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அல்லது ஒரு லிட்டர் வேம் 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசனத்தின் வழியாக கொடுக்கலாம்.  3. ஒவ்வொரு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு ஒரு முறை இ எம் கரைசல் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர்  பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம். 4. ஜிங்க் மொபைலைசிங் பாக்டீரியா ஒரு லிட்டரை 200 லிட்டருடன் கலந்து கொடுக்கலாம்.  5. மாலை வேளையில் மட்டுமே நீர்ப்பாசனம் செய்யலாம். இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் கொடுப்பது உப்பு பெருக்கத்திற்கும் அதன் மூலம் பாசிப் பெருகுவதற்கும் வாய்ப்பாக அமையும்.  6. நிலத்தின் ஈரம் குறைவதை உன்னிப்பாக கவனித்து மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தை காய விடக்கூடாது.  7. 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது 200 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் திரவத்தை தெளிப்பாக வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.
Recent posts

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள்

1. 1 லிட்டர் வேப்ப எண்ணெயில் 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணத்தை 3 நாட்கள் ஈரம் காயாமல் ஈரச்சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து ஏக்கருக்கு தெளிக்க சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். 2. 10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல் சேர்த்து அதிகாலை வேளையில் தூவினால் சாறு உறிஞ்சும் பூச்சி சாம்பல் மற்றும் துருநோயைக் கட்டுப்படுத்தலாம். 3. வெட்டி வேர் புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச் சுற்றி நட்டால் மண் அரிப்பைத் தடுக்கலாம். 4. கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால் கிணற்று நீர் ஆவியாவதைக் குறைக்கலாம். 5. கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யலாம். 6. எருக்கு இலை மற்றும் வேப்பம்புண்ணாக்கை மண் கலத்தில் இட்டு மூழ்குமாறு நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்த வாடையால் அந்திப்பூச்சிகள் கவரப்படும். 7. ஊமத்தை காயோடு, எருக்கு இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊற வைத்து வடிகட்டி தெளித்தால் அனைத்து வகைப்பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். 8. பிரண்டையை   வயலைச்சுற்றி நட்டால் கரையான்  தொல்

ஆற்காடு கிச்சிலி சம்பா இடுபொருள் பற்றிய விவரங்கள்.

பயிரின் மொத்த நிலப்பரப்பு : ஒன்னரை ஏக்கர். நாற்றின் வயது :18 நாள். ஜீவாமிர்தம், மீன்அமிலம், கடலைபுண்ணாக்கு, கலந்த பாசனம் - 9 தெளிப்புகள் : 1.சூடோமோனஸ் (38 வது நாள்) 2.மீன்அமிலம் (53 வது நாள்) 3. அக்னி அஸ்திரம் (85 து நாள்) ஊட்டஉரம் அளித்தது மொத்தத்தில் 1785  கிலோ. 1. அடியுரம் 2.68 வது நாள் 3.109 வது நாள் # கைக்களை -33 நாள் கோனோவீடர் -1 (58 வது நாள்)  குறைகள் : ஆள்பற்றாக்குறையால் நடவு மற்றும் களையெடுப்புகள் தாமதமாகி போனது. வழக்கமாக 13 நாள் நாற்றை நடவு செய்வோம். கோனோவீடரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதால் கிளைப்புகளின் எண்ணிக்கை 20 -25 என்ற அளவிலேயே இருந்தது. மூன்று முறை போடும்போது 40- 50 கிளைப்புகள் இருக்கும். பயிரில் எந்த பிரச்சனைகளும் இல்லை, நெல்மணிகள் நன்கு திரட்சியாய் உள்ளது. நோய், பூச்சி தாக்குதல், எலி வெட்டு அறவே இல்லை. பூச்சி கட்டுபாட்டிற்கு விளக்குபொறி, இனக்கவர்ச்சி என எதையும் எங்கள் பண்ணையில் வைப்பதில்லை, காரணம் உயிர்பன்மயசூழல் மற்றும் உயிரினங்களின் உணவு சங்கிலி சிறப்பாய் எங்கள் பண்ணையில் அமைந்திருப்பதாக  உணர்கிறேன். பூச்சிகளை கட்டுபடுத்த பொறிவண்டுகள் தட்டான்கள்,சி

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு சத்துகளின் பங்கு

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு பயிர்களின் மகசூலை தீர்மானிப்பதில் சுண்ணாம்பு சத்தின் (CALCIUM) பங்கு முக்கியமாக உள்ளது. பயிருக்கு பேரூட்ட சத்துகளின் தேவைக்கு (NPK) அடுத்தப்படியாக இரண்டாம் நிலை ஊட்டசத்துகளில் (CMS) சுண்ணாம்பு சத்து உள்ளது. பயிருக்கு சுண்ணாம்பு அவசியம் அதே நேரத்தில் அளவாக இருக்க வேண்டும். வெற்றிலைக்கு சுண்ணாம்பு எப்படியோ அதை போலத் தான் பயிருக்கு. மண்ணில் சுண்ணம்பு அதிகமானால், மண் புரை யோடி பயிர்களின் வளர்ச்சி தடைபடும் கால்சியம் கார்பனேட் எனப்படும் இந்த சுண்ணாம்பு சத்து மண்ணில் சரியான அளவிற்கு இருக்கிறதா? என்பதை கண்டறிய ஒரு எளிய தோதனை உள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்? நிலத்து மண்ணை கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு 10% ஹைட்ரோ குளோரிக் அமில (HCL) த்தை அதில் ஊற்ற வேண்டும். மண் பொங்கி கொண்டு வந்தால் மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருக்கிறது எனவும் சுமாராக நுரைத்தால் நடுத்தர நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சுண்ணாம்பு மண்ணின் தன்மை? இந்த மண் பெரும்பாலான வறண்ட பகுதியிலும், கருப்பு கலந்த மண்ணில் அதுவும் எங்கு எங்கு சிமெண்ட் ஆலை உள்ளதோ அப்பகுதியில் 30 கிமி

மாடித்தோட்டம் சில டிப்ஸ்

மாடித்தோட்டம் பராமரிப்பு குறிப்புகள்  நாம் எப்பொழுதும் மாடித்தோட்டத்துக்குள் நுழைஞ்சா செடிகளே நம்மளோடு பேசும். செடிக்கு தண்ணி பற்றாக்குறையா, எந்தச் செடிக்கு என்ன நோய் தாக்கியிருக்கு, ஏன் வளர்ச்சி குறைவாக இருக்குங்கிற விஷயத்த சொல்லிடும். செடிக்குத் தேவையானதைச் செய்தாலே செடி வளர்ந்துவிடும். காலை 8 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு மேலும் தண்ணி விடணும். கோடைக்காலத்தில தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் ஆடிப்பட்டத்தில் மட்டும் மாடித்தோட்டம் அமைச்சு பிப்ரவரி வரை வெச்சு கோடைக் காலங்கள்ல வளர்ப்பதை தவிர்த்துவிடலாம். திரும்பவும் ஆடிப்பட்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். மாடித்தோட்டத்தில் பூச்சி நோய்  பராமரிப்பு  “இலையின் நிறத்தை வைத்தே அதில் என்ன நோய் தாக்கியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். செடியில் இலைப்பேன் தாக்குதல் இருந்தால் பூந்திக் கொட்டையைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளித்தாலே போதும் கட்டுப்படும். பூஞ்சணத்தாக்குதல், பூச்சிகளுக்கு வராமல் தடுப்பதற்கும் 1 லிட்டர் தண்ணீருக்கு, 3 மி.லி வேப்ப எண்ணெய் என்கிற விகிதத்தில் கலந்து தெளித்தால் போதும். செடிகளின் அளவைப் பொறுத்து தயாரித்துக

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

நன்மை தரும் பூச்சிகள் -1

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிகள் இயற்கை எதிரிகள் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, இந்த நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் அறிந்து, அவற்றைப்பாதுகாப்பது அவசியம். தீமை செய்யும் பூச்சிகளை தாக்கி அழிக்கும் இயற்கை எதிரிப் பூச்சிகள் சிலவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்    இரை விழுங்கி அல்லது ஊன் விழுங்கி காட்டில் புலி மானை வேட்டையாடி சாப்பிடுவது போல சில நன்மை செய்யும் பூச்சிகள் நம் விளை நிலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடி தன் உணவாக எடுத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட நன்மை செய்யும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது ஊன் உண்ணி என்று  அழைக்கப்படுகிறது. பின்வரும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது  ஊன் விழுங்கிகளுக்கான சில உதாரணங்களாகும். கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாளும், பெண் பூச்சிகள் 35 நாளும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைவரை இடும். இது குஞ்சுப் பருவம