Skip to main content

Posts

எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது இதனால் பாதிப்புகள் ஏற்படுமா

“நிலக்கடலை செடிகளில் எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், அதை அலட்சியமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், அசுவினி பூச்சிகளின் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியே, எறும்புகளின் நடமாட்டம். இதனால், கணிசமான அளவு மகசூல் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.  எனவே, எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக செடிகளை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக, இலைகளின் அடிப்பாகத்தைப் பார்த்தால், அங்கு, அசுவினிப் பூச்சி குடிகொண்டிருக்கும். இது மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய பூச்சி இனமாகும். நிலக்கடலை செடிகளில் உள்ள இளம் தளிர்கள்,  முதிர்ந்த இலைகள், குருத்துகள் மற்றும் பூக்களிலும் அசுவினி பூச்சிகள் தங்கியிருந்து சாற்றை உறிஞ்சும். இதனால், செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இலைகள் சுருங்குவதோடு, மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கும். பூக்கள் உதிரும். கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் அசுவினிப் பூச்சிகள், ஒரு வித திரவத்தைச் சுரக்கும். இனிப்புச் சுவை கொண்ட இத்திரவத்தை சுவைப்பதற் காகவே எறும்புகள் வரும். இத்திரவம் பட்ட பகுதிகளில் கறுப்பு நிறத்தில் பூ...

"படைக்குருவிகள் அட்டகாசம் – பயிர் பாதுகாப்பு

  மானாவாரி நிலத்தில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்து வருகிறேன். கதிர்கள் முற்றி தானியங்கள் அறுவடைக்கு வரும் தருணத்தில் படைக்குருவிகளின் தாக்குதலால், அதிக மகசூல் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு என்னதான் தீர்வு? ” “மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதென்பது சவாலானது. சீரான மழைப்பொழிவு இல்லையென்றால், முதலுக்கே மோசம் வந்துவிடும். விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக, நல்ல மழை பெய்து தானியங்கள் விளைந்து அறுவடைக்கு வரும் நேரத்தில் படைக்குருவிகள், கிளிகள் உள்ளிட்ட பறவைகளின் தாக்குதலால் மகசூல் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.  கதிர் பிடிக்கத் தொடங்கியதும், 10 சென்ட் பரப்புக்கு 1 இடம் வீதம், சுமார் 15 அடி நீளம் கொண்ட ஆடியோ டேப்பில் 16 சி.டி-க்களை தொங்கவிட வேண்டும். பயிரின் உச்சிக் கிளைகளுக்கு இடையே, வெளிப்புறமாக கட்ட வேண்டும். ஊன்றுகோள்களாக குச்சிகள் பயன்படுத்தினால், அவற்றில் பறவைகள் வந்து அமர்ந்து சேதம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  எனவே, குச்சிகள் ஊன்றுவதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி போன்ற சி.டி-க்களில் ஏற்படும் பிரதிபலிப்பால் மட்டுமல்லாமல், ஆ...

இயற்கையான முறையில் வெண்டைக்காய் சாகுபடி செய்வது எப்படி

1. மண் மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மழை நீர் வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல் கலந்த செம்மண் அல்லது களிமண் ஏற்றது. pH 6.0 - 6.8 வரை இருக்க வேண்டும். 22-35°C வெப்பநிலை வெண்டைக்கு மிகவும் அவசியம். 2.நிலம் தயாரித்தல் நிலத்தை 3-4 முறை உழுது, களைகள் இல்லாமல் பண்படுத்துங்கள். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது 600 கிலோ ஊட்டம் ஏற்றிய தொழு உரம் அல்லது கன ஜீவாமிர்தம் இடுங்கள். 3.விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி ஆரோக்கியமான நாட்டு வெண்டை விதைகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களைத் (கோ 2, அர்கா அனாமிகா போன்றவை) தேர்வு செய்யவும். விதை நேர்த்தி ஒரு கிலோ விதைக்கு, இரண்டு லிட்டர் பீஜா அமிர்தத்தில் 5 நிமிடம் மூழ்க வைத்து, நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும். 4. விதைப்பு பருவம்: ஜூன் - ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்றவை. விதைப்பு முறை: வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியில், 1 செ.மீ ஆழத்தில் விதைகளை நடவு செய்யவும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1- 1.5 கிலோ விதைகள் தேவைப்படும். 5. நீர் நிர்வாகம் விதைத்தவுடன் லேசாக நீர் ப...

செடி முருங்கை விவசாயம்

முருங்கை ஒரு கோடைகால பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் அதிக விளைச்சலும் கொடுக்கக்கூடியது. பூக்கும் தருணத்தில் மழை இருந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப் படும். இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றவை. முருங்கை இரண்டு முறையில் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது. பல்லாண்டு முருங்கை தண்டு போத்து மூலமாகவும், செடி முருங்கை விதைகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. செடி முருங்கை கோடை காலத்தில் பூப்பதற்கு ஏற்ப செப்டம்பர் – அக்டோபர் (புரட்டாசி – ஐப்பசி) மாதங்களில் பயிரிடுவது நல்லது. மேலும், ஜுலை (ஆடிப்பட்டம்) மாதத்திலும் விதைகளை நடவு செய்யலாம். செடி முருங்கையில் நன்கு முற்றிய காய்களை அறுவடை செய்து, காய வைத்து விதை களை பிரித்தெடுக்க வேண்டும். தரமான விதைகளை தேர்வு செய்து சுமார் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உள்ள மக்கும் பைகளில் விதைத்து நாற்றுக்களாக வளர்த்து ஒரு மாதம் முடிந்த பின்பு நடவினை மேற்கொள்ளலாம். வழக்கமான நீர் மேலாண்மை, களை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்...

மாடித்தோட்டம் - கஸ்தூரி வெண்டை

 நறுமணம் மிக்க கஸ்தூரி வெண்டைக்காய் வெண்டைக்காய் தெரியும். அதென்ன கஸ்தூரி வெண்டை. சமீபகாலமா மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டங்கள்ல விதவிதமான நாட்டுக் காய்கறிகள தேடி பயிர் செய்றாங்க. அந்த வகையில இந்த கஸ்தூரி வெண்டையை நிறைய பேர் விரும்பி விதைக்கிறாங்க. பார்க்குறதுக்கு குட்டையா இருக்கும் இந்த வெண்டைக்காயை ஆண்டு முழுக்க சாகுபடி செய்யலாம். இதோட விதைகள் நறுமணம் மிக்கவைனு சொல்றாங்க. இதை வாசனை திரவியம் தயாரிப்புல பயன்படுத்துறாங்க. மூலிகையாகவும் ஆயுர்வேத மருத்துவத்துல பயன்படுத்தப்படுது. காய்கள் சாப்பிட மிகவும் ஏற்றது. விதைச்ச ரெண்டு மாசத்துக் குள்ள அறுவடைக்கு வந்துடும். இதன் விதைகள்ல இருந்து எண்ணெய்கூட எடுக்கப்படுகிறது . எங்கே வாங்கலாம் 1. Kasturi Venda seeds 25 pieces 2. GODSOWNCOUNTRYIN Kasturi venda - Abelmoschus moschatus, Kasturi okra seeds, Heirloom seeds, bhindi, Vegetable Seeds, kitchen planation (20) 3. kasthuri vendai

வீட்டு தோட்ட வளர்ச்சி – மாதந்தோறும் திட்டமிடல்

மாதாந்திர விதை பட்டியல்  ஒவ்வொரு மாதமும்  என்ன விதை, என்ன வகையான விதைகள் வாங்கலாம்  என்பதை தயார் படுத்தி கொள்ளலாம் . Download PDF                                                 🏡 மாதாந்திர வீட்டு தோட்டம் திட்டமிடல் வீட்டு தோட்டம் என்பது சுகாதாரமான வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். பருவநிலை மற்றும் உழைப்பை பொறுத்து ஒவ்வொரு மாதமும் பயிரிடும் வகையில் திட்டமிடுவது நமக்கு நன்மை பயக்கும் Download PDF 🏡 வீட்டு தோட்டத்தில் நீர் மேலாண்மை திட்டமிடல் வீட்டு தோட்டத்தை பராமரிப்பதில் நீர் மேலாண்மை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. சிறிய முயற்சிகளின் மூலம் நீரைத் திறமையாக பயன்படுத்தி, இயற்கையோடு இணைந்து வாழலாம். Download PDF

வீட்டுத்தோட்டம் Tracker - Free Printable Download

🏡 வீட்டுத்தோட்டம் Tracker-இன் பயன்பாடுகள்: விதைத்த தேதி பதிவு எந்தத் தாவரத்தை எந்த நாளில் விதைத்தீர்கள் என்பதை பதிவு செய்யலாம். உதாரணம்: 🍅 தக்காளி விதை – 01-07-2025 🌿 முருங்கை நட்டு – 05-07-2025 தாவர வகைகள் மற்றும் எண்ணிக்கை பயிரிடப்படும் தாவரங்களின் பெயர், எண்ணிக்கை மற்றும் வகையை பதிவு செய்யலாம். எடுத்துக்காட்டு: 5 மிளகாய் செடிகள், 3 கத்தரிக்காய் செடிகள். Example 🏡 Home Garden Tracker uses: Record sowing date You can record which plant you sowed on which day. Example: 🍅 Tomato seed – 01-07-2025 🌿 Drumstick plant – 05-07-2025 Plant types and number You can record the name, number and type of plants being planted. Example: 5 chili plants, 3 eggplant plants.                              Free Download Click Download Size 6 * 9 Size 8.5*11 இதே போன்று தேவை என்றால்  கமெண்டில்  பதிவிடவும்  If you need something similar, please post it in the comments.

விளைச்சலைப் பெருக்கும்
தென்னைநார்க் கழிவு உரம்

தென்னைநார்க் கழிவு உரம்... நீங்களே தயார் செய்யலாம் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க… தேங்காய் மட்டைகளைப் பதியம் போடுவது குறித்தும், இதில் சரியான வழிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். தேங்காய் மட்டைகளை எப்படி சேமித்து பதப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள பொன் வரிகளாகும். இந்த உலகத்தில் நன்மை என்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்ப்பதமான தீமை என்ற ஒன்று இருப்பது நிச்சயம். எந்த ஒரு பொருளும் இரண்டு விதமான வினைகளை ஆற்றும். அதை நாம் அணுகுவதைப் பொறுத்துதான் நன்மையாகவும் தீமையாகவும் மாறும். தேங்காய் மட்டைகள் மற்றும் தென்னை மட்டைகள், விவசாயத்துக்கு நன்மை பயக்கக்கூடிய இயற்கை பொருள்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சரியாகக் கையாளவில்லை என்றால், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். இவற்றில் ‘டானின்’ என்ற வேதிப்பொருள் அதிக அளவு உ...

புற்றுகள் இருக்கும் இடத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருக்குமா

பூச்சிகளில் மிக முக்கியமானது கறையான். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்வதில் கறையானுக்கு நிகர் எதுவும் கிடையாது. கறையான் எறும்பு மாதிரியே இருக்கும். ஆனால், எறும்பு கிடையாது. இது கரப்பான்பூச்சி குடும்பத்துக்கு நெருக்கமானது என்று சொன்னால் நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும். எறும்புகள்போல கூட்டமாகச் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையைக் கொண்டவை. ஆனால், நிறம் மட்டும் வெள்ளையாக இருக்கும். அதனால், இது வெள்ளை எறும்பு என்றும் அழைக்கப்படுகிறது. கறையான் ஒரு தூய்மைக் காவலர் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளில் கறையானுக்கு முக்கிய பங்குண்டு. இது, வயல்வெளிகளில் நடத்தும் தாக்குதலைவிட வீடுகள், கட்டடங்களில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. 2,750 வகையான கறையான்கள் இருந்தாலும், 10 சதவிகித கறையான்கள்தான் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், கறையான் என்ற உயிரினம் இல்லையென்றால், இந்த உலகம் குப்பைமேடாக மாறிவிடும் என்பதுதான் பகைமுரண்! பட்டுப்போன மரங்கள், செடி, கொடிகள் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக மாற்றி, தாவரக் கழிவுகள் மட்குவதற்குக் காரணமாக ...

விதையும் விளையும் வரலாறும் - 1

விதையும் விளையும் வரலாறும்   தக்காளி                                                                          வரலாற்றில் தக்காளி     நம்ம ஊர்ல தங்கம் விலை ஏறினா கூட கவலைப்பட மாட்டோம் ஆனா தக்காளி விலை ஏறினா போதும் காச் மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுருவோம் ,   கிலோ 110 ரூபாயை தாண்டினா உட்காந்து கவலைப்படுவோம் . ஒருவாரத்திற்கு மேல பிரிட்ஜ்லயும் வைக்க முடியாது நல்லா ருசியா சாப்பிட்டு வேற பழகிட்டோமா , நம்ம வீட்டுல தக்காளி இல்லாமலும்   சமைக்கவே முடியாது . வேற வழியில்லாம கிலோ நூத்திப்பத்துன்னு வாங்கலாம் என்று போனால்   நல்ல தக்காளியெல்லாம் நமக்கு முன்னாடி யாரவது எடுத்துட்டு போயிருப்பாங்க   வேற வழி இல்லாம அதுலயும் வடிகட்டி தக்காளியை வாங்கிட்டு வருவோம் . சரி தக்காளி நம்ம ஆதிகாலத்து உணவா , இல்ல இந்தியாவிற்கு இடையில் வந்ததுதான் . எப்ப வந்தது எப்படி வந்தது என்று ...