Skip to main content

Posts

விதையும் விளையும் வரலாறும் - 1

விதையும் விளையும் வரலாறும்   தக்காளி                                                                          வரலாற்றில் தக்காளி     நம்ம ஊர்ல தங்கம் விலை ஏறினா கூட கவலைப்பட மாட்டோம் ஆனா தக்காளி விலை ஏறினா போதும் காச் மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுருவோம் ,   கிலோ 110 ரூபாயை தாண்டினா உட்காந்து கவலைப்படுவோம் . ஒருவாரத்திற்கு மேல பிரிட்ஜ்லயும் வைக்க முடியாது நல்லா ருசியா சாப்பிட்டு வேற பழகிட்டோமா , நம்ம வீட்டுல தக்காளி இல்லாமலும்   சமைக்கவே முடியாது . வேற வழியில்லாம கிலோ நூத்திப்பத்துன்னு வாங்கலாம் என்று போனால்   நல்ல தக்காளியெல்லாம் நமக்கு முன்னாடி யாரவது எடுத்துட்டு போயிருப்பாங்க   வேற வழி இல்லாம அதுலயும் வடிகட்டி தக்காளியை வாங்கிட்டு வருவோம் . சரி தக்காளி நம்ம ஆதிகாலத்து உணவா , இல்ல இந்தியாவிற்கு இடையில் வந்ததுதான் . எப்ப வந்தது எப்படி வந்தது என்று ...

உழவோன் -2

                                2. வேட்டையாடிகள் அப்பொழுது வாழ்ந்த மனிதனுக்கு உணவு என்பது பெரும்பாலும் வேட்டையாடி உண்பதுதான் அல்லது வேறு ஏதாவது விலங்கு வேட்டையாடி சாப்பிட்ட மிச்சத்தை   எடுத்து வந்து சாப்பிடுவது . அவ்வப்பொழுது அந்த பகுதியில் கிடைக்கும் பழங்கள் . நாடோடியாக   நடக்க ஆரம்பித்த பொழுது எல்லா நேரமும் உணவு கிடைப்பதில்லை . அப்பொழுது மாற்றுவழியாக பழங்கள் , காய்கறிகளை உன்ன ஆரம்பித்தான் . ஆனால் அதிலும் சிக்கல் ஓன்று இருந்தது . எது நல்ல காய்கறி , எது விஷமற்ற பழம் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது . இதை கண்டுபிடிக்க முடியாமல் இறந்த மனிதர்கள் ஏராளம் இன்றைக்கு நீங்கள் கத்தரிக்காய் சாம்பார் சாப்பிட்டு நீங்கள் சாகவில்லையென்றால் அதற்கான உயிர் இழப்பு என்பது லச்சக்கணக்கில் என்பதை மறந்துவிடாதீர்கள் . எப்படி நல்ல உணவு என்பது கண்டுபிடிப்பது . உட்காந்து யோசித்தான் இயற்கை உதவி செய்தது . பறவைகளை   பார்த்தான் அது எந...

உழவோன் -1

                                   மனிதன் ஒரு ஆரம்பம் - 1   விவசாயம் என்பது ஒரு படி நிலையில் உருவாகவில்லை மனித இனம் தோன்றி அந்த இனம் நன்றாக உருவெடுத்து வளர்ந்து வேட்டையாடி ஒருநிலையில் தங்கி பின்பு விவசாயம் உருவெடுத்து இன்று முதல் நம்மை உருவாக்கி கொண்டிருக்கிறது . நான்   முதலில் மனிதன் எப்படி தோன்றினான் இந்த விவசாயம் எப்படி தோன்றி இருக்கலாம். அது எப்படி நம்முடன் பரினாமித்து வளர்ந்தது என்று பார்க்கலாம்   கிட்டத்தட்ட ஒரு மூணு மில்லியன்   வருஷத்துக்கு முன்னாடி இன்றைய ஆபிரிக்க காடுகளில் ஒரு புத்திசாலியான குரங்கினம் எழுந்து நிமிர்ந்து   நடக்க ஆரம்பித்தது. அது என்ன புத்திசாலியான குரங்கினம் ? ஏன்னா அந்த   ஒரு குரங்கினம் மற்றும் நிமிர்ந்து நடக்கல நியாண்டர்தால் போன்ற நான்கு வகையான குரங்கு இனங்கள் நடந்தது . இயற்கை ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒரு தனி சக்தியை கொடுத்தது . நியாண்டர்தால் மனித இனம் ரொம்ப பலசாலியாக இருந்தனர் . அப்ப நம்ம ஆரம்பத்தில் சொன்னேனே ஒரு புத்திசாலி அது நாமத...

நெல் வயல்களில் பாசி படர்வதை தவிர்க்க

1. உப்புத்தன்மை உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.  2. ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அல்லது ஒரு லிட்டர் வேம் 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசனத்தின் வழியாக கொடுக்கலாம்.  3. ஒவ்வொரு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு ஒரு முறை இ எம் கரைசல் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர்  பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம். 4. ஜிங்க் மொபைலைசிங் பாக்டீரியா ஒரு லிட்டரை 200 லிட்டருடன் கலந்து கொடுக்கலாம்.  5. மாலை வேளையில் மட்டுமே நீர்ப்பாசனம் செய்யலாம். இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் கொடுப்பது உப்பு பெருக்கத்திற்கும் அதன் மூலம் பாசிப் பெருகுவதற்கும் வாய்ப்பாக அமையும்.  6. நிலத்தின் ஈரம் குறைவதை உன்னிப்பாக கவனித்து மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தை காய விடக்கூடாது.  7. 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது 200 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் திரவத்தை தெளிப்பாக வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள்

1. 1 லிட்டர் வேப்ப எண்ணெயில் 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணத்தை 3 நாட்கள் ஈரம் காயாமல் ஈரச்சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து ஏக்கருக்கு தெளிக்க சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். 2. 10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல் சேர்த்து அதிகாலை வேளையில் தூவினால் சாறு உறிஞ்சும் பூச்சி சாம்பல் மற்றும் துருநோயைக் கட்டுப்படுத்தலாம். 3. வெட்டி வேர் புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச் சுற்றி நட்டால் மண் அரிப்பைத் தடுக்கலாம். 4. கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால் கிணற்று நீர் ஆவியாவதைக் குறைக்கலாம். 5. கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யலாம். 6. எருக்கு இலை மற்றும் வேப்பம்புண்ணாக்கை மண் கலத்தில் இட்டு மூழ்குமாறு நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்த வாடையால் அந்திப்பூச்சிகள் கவரப்படும். 7. ஊமத்தை காயோடு, எருக்கு இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊற வைத்து வடிகட்டி தெளித்தால் அனைத்து வகைப்பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். 8. பிரண்டையை   வயலைச்சுற்றி நட்டால் கரைய...

ஆற்காடு கிச்சிலி சம்பா இடுபொருள் பற்றிய விவரங்கள்.

பயிரின் மொத்த நிலப்பரப்பு : ஒன்னரை ஏக்கர். நாற்றின் வயது :18 நாள். ஜீவாமிர்தம், மீன்அமிலம், கடலைபுண்ணாக்கு, கலந்த பாசனம் - 9 தெளிப்புகள் : 1.சூடோமோனஸ் (38 வது நாள்) 2.மீன்அமிலம் (53 வது நாள்) 3. அக்னி அஸ்திரம் (85 து நாள்) ஊட்டஉரம் அளித்தது மொத்தத்தில் 1785  கிலோ. 1. அடியுரம் 2.68 வது நாள் 3.109 வது நாள் # கைக்களை -33 நாள் கோனோவீடர் -1 (58 வது நாள்)  குறைகள் : ஆள்பற்றாக்குறையால் நடவு மற்றும் களையெடுப்புகள் தாமதமாகி போனது. வழக்கமாக 13 நாள் நாற்றை நடவு செய்வோம். கோனோவீடரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதால் கிளைப்புகளின் எண்ணிக்கை 20 -25 என்ற அளவிலேயே இருந்தது. மூன்று முறை போடும்போது 40- 50 கிளைப்புகள் இருக்கும். பயிரில் எந்த பிரச்சனைகளும் இல்லை, நெல்மணிகள் நன்கு திரட்சியாய் உள்ளது. நோய், பூச்சி தாக்குதல், எலி வெட்டு அறவே இல்லை. பூச்சி கட்டுபாட்டிற்கு விளக்குபொறி, இனக்கவர்ச்சி என எதையும் எங்கள் பண்ணையில் வைப்பதில்லை, காரணம் உயிர்பன்மயசூழல் மற்றும் உயிரினங்களின் உணவு சங்கிலி சிறப்பாய் எங்கள் பண்ணையில் அமைந்திருப்பதாக  உணர்கிறேன். பூச்சிகளை கட்டுபடுத்த பொறிவண்டுகள்...