பூச்சிகளில் மிக முக்கியமானது கறையான். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்வதில் கறையானுக்கு நிகர் எதுவும் கிடையாது. கறையான் எறும்பு மாதிரியே இருக்கும். ஆனால், எறும்பு கிடையாது. இது கரப்பான்பூச்சி குடும்பத்துக்கு நெருக்கமானது என்று சொன்னால் நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும். எறும்புகள்போல கூட்டமாகச் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையைக் கொண்டவை. ஆனால், நிறம் மட்டும் வெள்ளையாக இருக்கும். அதனால், இது வெள்ளை எறும்பு என்றும் அழைக்கப்படுகிறது. கறையான் ஒரு தூய்மைக் காவலர் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளில் கறையானுக்கு முக்கிய பங்குண்டு. இது, வயல்வெளிகளில் நடத்தும் தாக்குதலைவிட வீடுகள், கட்டடங்களில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. 2,750 வகையான கறையான்கள் இருந்தாலும், 10 சதவிகித கறையான்கள்தான் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், கறையான் என்ற உயிரினம் இல்லையென்றால், இந்த உலகம் குப்பைமேடாக மாறிவிடும் என்பதுதான் பகைமுரண்! பட்டுப்போன மரங்கள், செடி, கொடிகள் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக மாற்றி, தாவரக் கழிவுகள் மட்குவதற்குக் காரணமாக ...
விதையும் விளையும் வரலாறும் தக்காளி வரலாற்றில் தக்காளி நம்ம ஊர்ல தங்கம் விலை ஏறினா கூட கவலைப்பட மாட்டோம் ஆனா தக்காளி விலை ஏறினா போதும் காச் மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுருவோம் , கிலோ 110 ரூபாயை தாண்டினா உட்காந்து கவலைப்படுவோம் . ஒருவாரத்திற்கு மேல பிரிட்ஜ்லயும் வைக்க முடியாது நல்லா ருசியா சாப்பிட்டு வேற பழகிட்டோமா , நம்ம வீட்டுல தக்காளி இல்லாமலும் சமைக்கவே முடியாது . வேற வழியில்லாம கிலோ நூத்திப்பத்துன்னு வாங்கலாம் என்று போனால் நல்ல தக்காளியெல்லாம் நமக்கு முன்னாடி யாரவது எடுத்துட்டு போயிருப்பாங்க வேற வழி இல்லாம அதுலயும் வடிகட்டி தக்காளியை வாங்கிட்டு வருவோம் . சரி தக்காளி நம்ம ஆதிகாலத்து உணவா , இல்ல இந்தியாவிற்கு இடையில் வந்ததுதான் . எப்ப வந்தது எப்படி வந்தது என்று ...